இறையாட்சி மலர வேண்டும்
புது வாழ்வு புலர வேண்டும்(2)
வார்த்தை மனுவாக
இங்கு நீதி நிலைக்க வேண்டும்(2)
நிலை மாறுமா கரம் சேருமா
வலுவாகுமா துயர் மாறுமா
நிலை மாறுமே கரம் சேருமே
வலுவாகுமே துயர் மாறுமே(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்
பாலும் தேனும் பொழிந்திடுமே
கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே
மன்னா நமது தரை விழுமே
பாலை நிலங்கள் யாவும் இனி
பசுமை நிறங்களாகும்(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்- இறையாட்சி
சிங்கமும் கன்றும் தோழமையில்
சிறுவர் நட்பும் பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துனிக்கிகள் எல்லாம் பூம்பொழிவில்
பாழும் மனங்கள் யாவும் இனி
பாசம் நிறைந்ததாகும்(2)
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்- இறையாட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment