Saturday, August 16, 2008

உன் சிறகுகள் நிழலில்

உன் சிறகுகள் நிழலில்
எந்நாளும் என்னை
அரவனைத்திடி இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண்தணலிலும் மனம் குளிரும்
உந்தன் கண்களின் இமைபோல்
எந்நாளும் என்னைக் காத்திடு என் இறைவா

பாவங்கள் சுமையாய் இருந்தும்
உன் மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால்
உன் ஆலயம் புனிதம் அருளும்

வலையினில் விழுகின்ற பறவை
அன்று இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே- நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

No comments: