Thursday, August 28, 2008

பூந்தென்றலே

பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதே
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே - உன் அன்பைக் காணுதே

புதுராகச் சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும் -2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே மலைகள் காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே ஓ....

கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும் -2
கடலும் வானும் அருவிகளும் உன் திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே ஓ.....

No comments: