Monday, August 11, 2008

இயேசு என்னும்

ஆண்டவரின் அருள் பிரசன்னம்
அன்புடனே நம்மை காக்கும் பிரசன்னம்
தேடிடும் மக்களை தேற்றிடும் இறை பிரசன்னம்
இதுவே நம்மை மீட்கும் பிரசன்னம்

இயேசு என்னும் திருப்பெயரை சொல்லும்போதிலே
இன்பம் வந்து பாயுதம்மா நமது வாழ்விலே-2
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் இயேசு பிரசன்னம்-2

விண்ணில் வாழும் இறைவன் நமது தந்தையாவதால்
மண்ணில் நமது மனங்களிலே வாழ்ந்து வருவதால்(2)
காண்பது காண்பது தேவன் இயேசு திவ்ய பிரசன்னம்
உரிமையிலே அப்பா தந்தாய் என்றழைப்பதால்
அனைவருமே அவரின் அன்பு பிள்ளையாகிறோம்(2)
புலரும் காலைப் பொழுதில் பொதிகைத் தென்றல் போல‌
இயேசு வாழ்வதாலே இனிமை.....இனிமேல் இனிமை....

இருவர் மூவராக நாமும் கூடி வருவதால்
இதயம் திறந்து வாஞ்சையுடன் பாடி ஜெயிப்பதால்(2)
உணர்வது உணர்வது இயேசு தரும் இன்ப பிரசன்னம்
ஜாதி பேத களைகளை நாம் கடந்து செல்வதால்
கிறிஸ்துவுக்குள் ஓரினமாய் உரிமை கொண்டதால்(2)
புதிய உலகம் காண்போம் புனித பயணம் செய்வோம்
இயேசுவோடு நடந்தால் இல்லை....பகைமை இல்லை.....

No comments: