Wednesday, August 13, 2008

புது வாழ்வில்

புது வாழ்வில் வசந்தம் பொங்கிடவே நாம் ஒன்றாய் சேரும் நேரம்
இனி வாழும் காலம் எல்லாம் இன்பம் நம்மில் பெருகிடவேண்டும்
இறைவனின் சங்கமத்தில் நாம் ஒன்றாய் கூடிடுவோம்(2)
பலியினில் கலந்திட இணைந்திடுவோம் - நல்
பகிர்வினை வளர்த்திட முனைந்திடுவோம் - புது

பாடும் அந்த பறவைகள் கூட்டம் பரமனைப் புகழ்ந்திடுதே
நீங்களும் தேவனைப் புகழ்கையிலே அது தேனாய் இனிக்கிறதே(2)இயற்கையோடு நாமும் சேர்ந்து இறைவனைப் புகழ்ந்திடுவோம்(2)
இதயம் மீட்டும் இன்னிசைப் பாடி இறையடி புகுந்திடுவோம்

வெள்ளிமணி போல் பனித்துளி நீரால் புல்வெளி நனைகிறதே
மென்மையான் பூவின் இதழில் தேனும் சுரக்கிறதே(2)
உண்மையான் உந்தன் அன்பால் உள்ளம் நிறைகின்றதே(2)
உன்னில் இணையும் உறவில் வாழ்ந்தால் உலகம் இனிக்கிறதே

No comments: