ஆயராம் என் ஆண்டவர் குறையேதும் எனக்க்கில்லையே
பசும்புல் வெளிதனில் இளைப்பாறவே செய்கிறார்
நீர் நிலை அழைத்துச் சென்று புத்துயிர் அளிக்கிறார்
தம்பெயர் கேற்பவே நீதிவழி நடத்துவார்
சாவின் இருளினிலே நான் நடந்திட நேர்ந்தாலும்
உம் துணை இருப்பதனால் அஞ்சிடத் தேவையில்லை
உம் கரக் கோலும் உறங்கா விழியும்
என்னைத் தேற்றிடுமே
உன் விழி ஓரப் பார்வையே போதும்
தீமைகள் அகன்றிடுமே - ஆயராம்
எதிரிகள் கண்முன்னே எனக்கு விருந்து தருகின்றீர்
பாத்திரம் நிரம்பிடவே தலையில் தைலம் பூசுகிறீர்
வாழ்ந்திடும் நாளெல்லாம் உம் அருள் நலமும்
பேரன்பும் புடை சூழும்
ஆண்டவர் இல்லம் நெடுநாள் வாழ்வேன்
அருட்கரம் எனைத் தேற்றும் - ஆயராம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment