Thursday, August 28, 2008

மன்னவா உன் வாசல்

மன்னவா உன் வாசல் தேடிஓடி
நான் வந்தேன்- உன்முக‌
தரிசனம் கேட்டேன்
உன்பதம் அமர்ந்து உன்முகம் பார்த்து
உன்மொழி கேட்டால் போதுமே

அன்பு கமழும் மென்மையான அனுபவம் எல்லாம்
அழகு வாய்ந்த இனிமையான நினைவுகள் எல்லாம்
உன்னிடம் தானே பேச இயலும்-2
உவந்து எல்லாம் கூற முடியும் கூற முடியும் - மன்னவா

துன்பம் நெஞ்சில் இறக்கி வைத்த சோகச் சுமை எல்லாம்
நடந்தவைகள் அழித்துத் தகர்ந்த நம்பிக்கை எல்லாம்
புரிந்து கொள்வார் எவரும் இல்லை-2
உன்னைத் தவிர யாரும் இல்லை யாரும் இல்லை - மன்னவா

No comments: