Wednesday, August 13, 2008

நன்மைகள் செய்த

நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர்(2)
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது வெறும் பலியாம்(2)
கொடைகள் பெறுவது தகும் வழியாம்(2)
குறையினைப் போக்கும் கோ வழியாம்

வானத்தை நோக்கிடும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம்(2)
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம்(2)
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்

No comments: