இன்பக் கனவொன்று நான் கண்டேன்
இறையாட்சி மலரக் கண்டேன்
எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன்
இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன்- இறை
அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன்
பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன்
பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தேன்
எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன்
அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன்- அகச்
சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன்
நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன்
நிதமும் புதுமை வழ்வில் சேரக் கண்டேன்
அன்பினில் நிறைவை நான் கண்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment