Thursday, January 15, 2009

அன்பின் திருக்குலமே

அன்பின் திருக்குலமே இறை
இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒருமனதாய் கூடித்
தொழுவோம் புகழ்பலியாய்
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
ம‌றையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்

இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை
இழந்த தியாகம் உரைப்போம்
சுயநலம் மறைய சமத்துவம் வளர‌
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்

இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் இந்த‌
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும் திரு
விருந்து பகிர்வில் மகிழ்வோம்
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ‌
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்

No comments: