அன்பின் திருக்குலமே இறை
இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒருமனதாய் கூடித்
தொழுவோம் புகழ்பலியாய்
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம்
இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய் தன்னை
இழந்த தியாகம் உரைப்போம்
சுயநலம் மறைய சமத்துவம் வளர
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம்
இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் இந்த
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினை பரிமாறும் திரு
விருந்து பகிர்வில் மகிழ்வோம்
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment