Thursday, January 15, 2009

இறைவா இதோ

இறைவா இதோ வருகின்றோம்- உம்
திரு உள்ளம் நிறைவேற்ற

கல்லான இதயத்தை எடுத்துவிடு -எமை
கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு-2
எம்மையே நாங்கள் மறக்கவிடு -கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு

பலியென உணவைத் தருகின்றோம் -நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம்-2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்- எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு

No comments: