உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே
இறையருள் மலர
வனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே
இருளினில் தவித்திட்ட வேளையிலே- முழு
நிலவென நிலமதில் நடந்தவனே
துயரத்தில் தவித்திட்ட தருணங்களில்- வழித்
துணையென தோள் தந்த இறையவனே
பாவம் நம்மிலே மறையாதோ- தேவன்
பாதம் மனதிலே படராதோ
சோகங்கள் மறைந்திட அருள் தருவாய்
கவலைகளால் மனம் கலங்கையிலே -உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே- உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே -உந்தன்
அன்பின் பலியினில் கல்ந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment