அன்பின் வடிவே உயிரின் வடிவே என்னைத் தேடும் இதய தெய்வம் ஆராதனை ஆராதனை(2)
உயிரைக்கொடுக்கும் அன்பு உறவில் மலரும் அன்பு(2) உள்ளம் கவர்ந்த அன்பு உயிரில் கலக்கும் அன்பு(2) உயர்ந்து நிற்கும் அன்பு உலகம் ஏங்கும் அன்பு உண்மை பயக்கும் அன்பு அன்பு செய்யும் அன்பு(2)
எங்கும் நிறையும் அன்பு என்னைக் காணும் அன்பும்(2) எதையும் செய்யும் அன்பு எனக்காய் ஏங்கும் அன்பு(2) என்னைக் காக்கும் அன்பு என்னில் வாழும் அன்பு என்றும் வாழும் அன்பு அன்பு செய்யும் அன்பு(2)
அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னியினின்று நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர் உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்
இறுதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும் அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத் தம்மைத் தாமே திவ்ய உணவாய் தம் கையாலே அரிளினாரே
தேவாலய வலப்புறமிருந்து தண்ணிர் புறப்படக் கண்டேன் அல்லேலூயா அந்த தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்று கூறுவர் அல்லேலூயா-(3)
ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக ஆதியில் இருந்தது போல இன்றும் என்றும் நித்தியமாகவும் ஆமென்
மாண்புயர் இந்த அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும் இனி மறைந்து முடிவு பெறுக புதிய நியம முறைகள் வருக புலன்களாலே மனிதன் இதனை அறிய இயலாலாக் குறையை நீக்க விசுவாசத்தின் உதவி பெறுக
பிதா அவர்க்கும் சுதனவர்க்கும் புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும் மீட்பின் பெருமை மகிமையோடு வலிமை வாழ்த்து யாவுமாக இருவரிடமாய் வருகின்றவராம் தூய ஆவியானவர்க்கும் அளவில்லாத சம புகழ்ச்சி என்றுமே உண்டாகுக- ஆமென்
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே உம்மை ஆராதனை செய்கின்றேன் இறைவா ஆராதனை செகின்றேன்
என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும் புது வலுவூட்டி என்னைத் தேற்றும் என் கடமை என்னவென்று காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும் என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறிப் பணிவேன் என் இறைவா உந்தன் திருவுளப்படி எனை நடத்தும் ஓ....
மார்கழியில் உதித்த மன்னவனே உன் மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய் மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்
வருந்தியே உழைத்தும் வறியவரானோர் உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர் அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர் அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர் இவர் நிலை மாற இறைமையை துறந்தாய் மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர் செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர் அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர் அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர் இவர் நிலை மாற இறைமையை துறந்தாய் மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்
நமக்காய் ஒரு குழந்தை- இந்த நானிலம் தவழ்ந்தது நலிந்த நிலை மாறும் என்னும் நம்பிக்கை மலர்ந்தது ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு விண்ணகமோ மண்ணகமோ இல்லை இரண்டும் உந்தன் பிறந்தகமோ
வானின் தூதர்களே இன்று வாழ்த்து பாடுங்களேன் விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால் மண்ணகத்தில் அமைதி எங்கே மாடடை குடிலில் பிறந்தவனே இந்த மானிடர் நடுவில் பிறந்தாலென்ன ஆடுகளே மாடுகளே நீங்கள் மாந்தரிலும் சிறந்தவரே
மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள் வாழ்க்கை எண்ணுகின்றோம் மனித மாண்பு என்னவென்று- முற்றும் மறந்த கூட்டம் உண்டு இங்கு மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள் மான்பினை எமக்கு கூறாயோ வறுமை நோய் பிளவுகள்- இனி வாராதிருக்கச் செய்வாயோ
பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம் இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே லல்லல்லா........
இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை எளியவர் மகிழ்வு கண்டார் மாபரன் இன்று பிறந்தார்- நம் பாவங்கள் போக்க வந்தார் இருளை நீக்க வந்தார்- அருள் ஒளியை ஏற்ற விளைந்தார் விண்ணும் மண்ணும் இணைய- அதில் இறைவன் புனிதம் கமழ பாலன் இயேசு நம் மனங்களில் சிரிப்பார் மகிழ்வாய் மனமே
அன்புருவானவர் வந்தார்- மண்ணில் மனிதனாகப் பிறந்தார் அமைதியின் தூதன் பிறந்தார்- நம் அகமதில் நிறைவு தந்தார் பாசம் பரிவு கொண்டார்- நம் பாவம் யாவும் சுமந்தார் நம்மில் ஒருவரானார்- நம் இன்பம் துன்பம் பகிர்ந்தார் பாலன் இயேசு நம் மனங்களில் சிரிப்பார் மகிழ்வாய் மனமே
பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய ஆவியாலே மனிதன் ஆனாரே மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை கன்னிமரி மைந்தன் ஆனாரே(2) இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார் வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார் வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த தரணி மீது மழலை ஆனாரே(2) மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார் மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார் வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்
இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள் இன்று மலர்ந்த நாள் மண்ணிலே அன்பின் குழந்தை இயேசுவே உந்தன் மழலை மொழி கேட்கவே எந்தன் மனமும் தினம் ஏங்குதே இன்று பிறந்த நாள் வாந்த்துக்கள் இன்று மலர்ந்த நாள் மண்ணிலே HAPPY CHRISTMAS HAPPY CHRISTMAS MERRY CHEISTMAS MERRY CHRISTMAS
ஒரு விண் தெய்வம் நம்மோடு மண் மீதிலே மழலையாய் மலர்ந்ததே அந்த விண் வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே வியலாய் புலர்ந்ததே இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும் வையம் மகிழும் வான் படை போற்றும் வானதேவன் வரவில் -நல்ல இதயம் நிறையும் உதயம் மலரும் தேவ மைந்தன் உறவில்- இன்று
ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே என்னில் எழுந்தே நீ வா- உன் ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே என்னில் இசை பாடவா கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன் தெய்வமே செல்வமே நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ
அழகான ஆன்மாவில் வருகின்றவர் என்னை உருவாக்கவா- நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா ஆன்ம ஒளி ஏற்றவா சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன் தெய்வமே செல்வமே! நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி என்றும் உந்தன் புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரை தேற்றிக் காத்திடும் உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம்
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்-2 நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் சகாயத் தாய் மரியே எம்மை அரவணைத்திக் காப்பாய் நீயே
அண்ணல் இயேசு அன்பின் வழியைக் கற்றுத் தந்த உன் அன்பு மிகு ஆதரவில் அச்சம் நீங்குதே-2 நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் சகாயத் தாய் மரியே எம்மை அரவணைத்திக் காப்பாய் நீயே
அம்மா எங்கள் தாயே உனைப் பாடாத நாவில்லையே அருகே நீயும் வரவே உனைத் தேடாத நாளில்லையே அந்த மேலோக மண்ணிலா தாயாக என்னிலா பூலோகம் வந்த வெண்ணிலா என்னைத் தேடி அம்மா
ஏழையின் கண்ணீர் இங்கு கரைந்தோடுதே கான மழை நெஞ்சில் பொங்கி வழிந்தோடுதே ஏந்தி வந்த சுமையெல்லாம் கனவாகுதே சுகராகம் பாட எங்கள் மனம் தேடுதே மரியே உன்னை அடைந்தோம் நெஞ்சம் நிறைந்தோம் அன்பிலே- அம்மா
கோடான கோடி மக்கள் குறை தீரவே தினந்தோறும் தேடி வரும் தாய் நீயல்லோ கூடிவந்து திருப்பாதம் சரணாவதால் ஆனந்த கானமிங்கு அலைபாயுதே மலரே மலரும் நிலவே உள்ளம் மகிழ்ந்தோம் உன்னிலே- அம்மா
நெஞ்சில் சுரக்கும் நன்று சுரங்கள் நானிலமெங்கும் நான் பாட நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண் போல விண்ணில் தெறித்தும் மின்னல்களாய் மண்ணில் முளைத்திடும் நல் விதைகள் மின்னித்தெறித்திடும் மின்னல்களாய் கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்
தோளழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க தோழமையில் பூமியிலே புதுவுலகம் படைக்க நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனலை யார் வைத்தது அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் எல்லாமே நீ தந்தது-2
எல்லையில்லா உலகிலே எனக்கு உயிர் தந்தாய் எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது இறையரசின் நினைவுகளும் யார் தந்தது புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் எல்லாமே நீ தந்தத-2
காலம் போற்றும் கருணை தெய்வமே உன் தயவினால் ஞானம் தாரும் உன்னைப் பாடவே
வான் கூறும் வண்ணக் கவிதை பூமி சிந்தும் புன்னகை கீதம் அத்தனையும் சொல்வதுன் புகழல்லவா நீ தந்த வாழ்வைப் பெற்று வாழ்கின்ற உயிரினங்கள் அனைத்திலும் இருப்பது நீயல்லவா கண்ணின் மணி போல் காக்கும் தெய்வமே உன் புகழ் பாட ஞானம் தாருமே பணி வாழ்வில் பண் பாடும் துருத்தூதனாய் எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்
உன் கனவை நெஞ்சில் தாங்கி என் ஜீவன் வாழும் போது உலகினர் காண்பதுன் அருளல்லவா நான் உன்னில் இணைய வேண்டும் நீ என்னில் நிறைய வேண்டும் உணர்வோடு கலப்பது அழகல்லவா தாய் தந்தை யாவும் இறைவனே என் பெயரை உந்தன் கையில் தாங்குமே நீ தந்த புவி வாழ்வில் துருத்தூதனாய் எனை ஏற்றிட திருவடிகளில் சரணாகின்றேன்
ஒரு போதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே நீங்காத நினைவாக வா இறைவா
உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன் உன்னோ நான் வாழுவேன்
நீர் தேடும் மான் போல தேடி வந்தேன் நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம் என் இயேசுவே என்னுள்ளம் நின்றாய் நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய் உன்னோடு நான் வாழுவேன்
எந்தன் இதய இனிய வேந்தன் என்னில் வந்து தங்கும் நேரம் வந்ததும் வசந்தம் வீசுமே வசந்தத்தில் வாழ்வுண்டு வாழ்வில் அவனுண்டு என்னில் அவனும் அவனில் நானும் என்றும் ஒன்றுதானே
வாழ்க்கை மூச்சு நின்றுவிடும் அன்றே வீசிடும் காற்று நீ எனில் இல்லை என்றால் ஓடோடி வந்தேன் உனை என்னில் ஏற்க ஒன்றாகும் நேரம் நான் உன்னைப் பாட ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பு தெய்வமே அருள் தாருமே நீ மீட்டும் வீணையும் நான் பாடும் பாடலும் இறைகடலில் சங்கமிக்கும் இதய வேந்தனே
நிம்மதி நீயாய் இருக்கின்ற போது நிதமும் நீ என்னில் தங்கிட வேண்டும் சிந்தனைகள் யாவும் சீர்படுத்த வேண்டும் சொல் செயல் யாவும் தூய்மையாக வேண்டும் ஆ..ஆ..ஆ..ஆ..அன்பு தெய்வமே அருள் தாருமே என் வறுமை எனும் இருள் உன் வளமை ஒளியிலே அகன்றிட வேண்டும் என் அன்பு தெய்வமே
என் மன்னவா என்னில் இறங்கி வா(2) தினமும் எந்தன் உணவாய் என்றும் என்னில் மகிழ வா ஆன்ம ஜோதியே என்றும் என்னில் மகிழ வா
பாட்டிசைத்து பாட வந்தேன் உந்தன் மனம் மகிழுதே காலமெல்லாம் காத்திருந்தேன் உந்தன் சொந்தம் தேடுதே என் உயிரே என் உறவே எந்தன் உள்ளம் எழுந்து வா ஆ....ஆ.... என் உயிரே தினம் தினம் என்னில் வா என்னில் வாழ வா உயிரில் கலந்து வா -என் மன்னவா
நெஞ்சமெனும் கோவிலிலே தெய்வமாய் எழுந்து வா தஞ்சமென்று ஓடி வந்தேன் நலம் தந்து அணைக்க வா அன்புருவே ஆரமுதே அன்பர் எம்மில் எழுந்து வா ஆ....ஆ... அன்புருவே தினம் தினம் என்னில் வா என்னில் வாழ வா உயிரில் கலந்து வா- என் மன்னவா
எந்தன் தேவா என்னில் வாரும் உந்தன் அன்பை என்னில் தாரும் எந்தன் நாவு உன் நினைவாக என்றும் உம்மை எண்ணிப் பாடும்- எந்தன்
இறை இயேசுவின் திவ்யப் பிரசன்னம் எந்தன் இல்லத்தில் இன்று தங்கும் புவி மீதினில் நீதியை அருள எந்தன் ஆண்டவர் விரைவாய் வருவார் வான வீதியில் மின்னல் தோற்றம் போல் ராஜா வருவாரே மனமே காத்திரு நீர் என்னில் வந்ததால் நான் உம்மில் தான்- எந்தன்
உறவாடும் நேரமிது உனைக் காணும் காலமிது என் இயேசுவே நாளுமே இதயம் வாருமே
மலராகினாலும் சருகாகினாலும் எனையே உனதாக்கினாய் மலையாகினாலும் மடுவாகினாலும் நிலவே எனை நோக்கினாய் அரணாய் என்னை நீ சூழ்ந்து நின்றாய் தாயின் கருவில் எனைத் தேர்ந்த தெய்வம் உன்னில் மகிழ்கின்றேன்
பதராக என்னை ஊர் பார்க்கும்போது பயிராக நீ மாற்றினாய் பகையோடு என்னைப் பிரிந்தாளும் போது அன்பே எனை நோக்கினாய் துரும்பான என்னை விரும்பினேன் என்றாய் என் வாழ்வின் பொருளாய் நீயாகும்போது எதையும் தாங்குவேன்
உணவாக எழும் தெய்வமே உறவாட எனில் வாருமே தனைத் தந்த தெய்வம் எனை ஆள வந்தால் தனிமைகள் பறந்தோடுமே தனியின்பம் எனை சூழுமே ஓ....
பிரிந்ததால் வீழ்ந்திட்ட மானிடத்தை இணைத்திட தோன்றிய தேனமுதே பகைமையால் வளர்ந்திட்ட பிளவுகளை போக்கிட மலர்ந்திட்ட வான் கவியே திருவுணவும் திருப்பானமும் உனதுறவை எடுத்துச்சொல்லும்(2) ஒரு பந்தி சம பந்தி எந்நாளும் மலரச் செய்யும் ஆ.....
காலமெல்லாம் திருவுணவில் தனை வழங்கும் கரையில்லா உனதன்பை நான் மறவேன் கலங்கிடும் வேளையில் கை விடாமல் கரம்பிடிக்கும் என் தேவா உனைப்பிரியேன் காத்திருக்கும் கண்களுக்கு காட்சியாக நீ வருவாய்(2) கனிவுடனே தங்கிடுவாய் ஏழை என் நெஞ்சினிலே
இறைவனின் உடலிது அவரது இரத்தமிது அவர் நினைவாய் நாம் செய்யும் மீட்பின் சின்னமிது- நம் வாழ்வின் உணவிது
அப்பத்தை உண்டு கிண்ணத்தைப் பருகும் வேளைகள் எல்லாம் விசுவாசமே ஆண்டவர் வருகின்ற நாள்வரை நாமும் மரணத்தின் அறிக்கை செய்வோமே ஆதலினால் தகுதியுடன் அப்பத்தை உண்டிடுவோம்- நாம் கிண்ணத்தைப் பருகிடுவோம்
அன்பு தேவன் சொன்ன வாக்கு அழிவு காண்பதில்லை என்று வாழும் மாந்தர் காணும் பாதை புதிய உலகம் சேருமே தன்னைத் தந்த தலைவன் அவரை உறவு வாழ்வில் சுவைத்து மகிழ்ந்தால் நெஞ்ச நிறைவு தந்து தேற்றும் இனிய அமைதி தோன்றுமே கண்டுகொண்டோம் இயேசுவே உம்மையே காலமெல்லாம் காக்கும் உந்தன் அருளையே- அன்புதேவன்
திராட்சைக்கொடி நானே என்று தன்னை அளித்தார் நீங்கள் அதன் கிளைகள் என்று நம்மை அழைத்தார் நல்லமேய்ப்பன் நானே என்று தன்னையே தந்தார் நீங்கள் என் மந்தை என்று நம்மை இணைத்தார் நண்பனுக்காய் உயிர்தருதல் மேலான அன்பு அன்புக்கு இலக்கணமே இயேசுவே உறவின் பாலம் இயேசுவே உதய கீதம் இயேசுவே எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே -அன்புதேவன்
வானில் உணவு நானே என்று தன்னைத் தந்தாரே என் நினைவில் வாழ்க என்று நம்மை அழைத்தார் உலகின் ஒளி நானே என்று தீபம் ஆனாரே தீப ஒளியை நாடு என்று நம்மைப் பணித்தார் உலகத்தின் இறுதி வரை உன்னோடி வாழ்வேன் வாழ்வுக்கு ஆதாயம் இயேசுவே தியாக தீபம் இயேசுவே வாழ்வின் உணவு இயேசுவே எல்லார்க்கும் எல்லாமே இயேசுவே- அன்புதேவன்
பொன்னும் பொருளிமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்(2) சொந்தம் பந்தமுமெல்லாம் நீயேயெனச் சொல்லிவந்தேன் எந்தையும் என் தாயும் நீயன்றோ நீயோ என்னை ஆளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ- என் நிம்மதி இழந்து நின்றேன் வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான் அளவில்லா பாவம் செய்தேன் தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே உனக்கு நான் எதையளிப்பேன்- இன்று உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும் ஒழிந்திட உழைத்திடுவேன் அமைதியும் நீதியும் அன்பும் அறமும் நிலைத்திட பணி செய்வேன் தனது இன்னுயிரை பலியெனத் தந்தவரே உனக்கு நான் எதையளிப்பேன் இன்று உனக்கு நான் எனையளித்தேன்
காணிக்கை தந்தோம் தேவா-எம்மை கனிவோடு கரம் தாங்கி ஏற்பாய்-2 எம் வாழ்விலே உம் கனவை வாழ-2 அருளாகி நிறைவாக தினந்தோறும் தாரும்
மனுவாக வந்தாய் மண் வாழ்விலே நலமான இறையாட்சியே-2 மனித நலம் காக்க மாண்போடு வாழ-2 எம் உயர்வையும் பிறர் உயர்வையும் உம் பாதம் வைத்தோம்(2) இறைவா எங்கள் தலைவா நிறைவாய் வரங்கள் தருவாய்-2
நலமாக எந்நாளும் உருவாகவே நலம் காணும் நல்வாழ்விலே-2 சாதி சமயம் நீங்க சம வாழ்வு ஓங்க-2 எம் உணர்வையும் பிறர் உணர்வையும் உம் பாதம் வைத்தோம்-2 இறைவா எங்கள் தலைவா நிறைவாய் வரங்கள் தருவாய்(2)
கோதுமை மணியும் திராட்சை இரசமும் உம்மிடம் கொண்டு வந்தோம் நேரிய உழைப்பும் உழைப்பின் பயனும் உமக்கே கையளித்தோம் இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும் உம்மிடம் படைக்க வந்தோம் எம் செயலனைத்தும் உம் செயலாக மாற்றிட கூடி வந்தோம் - காணிக்கை
இப்படைப்பில் திருப்பலி பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.ஒரு வேளை தேவையானவர்களுக்கு பயனளிக்கலாம்.இவையனைத்தும் கடந்த நான்கு வருடங்களாக தொகுக்கப்பட்டிருக்கும் பாடல்கள்.இவை சம்மந்தமாக படைப்புகள் எவையேனும் இருப்பின் தெரியப்படுத்தலாமே!