Wednesday, July 23, 2008

பூந்தென்றலே

பூந்தென்றலே அருளூற்றும் சுரம் பாடுதே
பூவின் அழகில் நெஞ்சம் பேசுதே....ஓ ..ஓ
உன்அன்பை காணுதே -பூந்தென்றலே

புதுராக சந்தத்திலே வண்டுகள் பாடும்
ஓடிவரும் ஓடை ஒலி தாளங்கள் போடும்-2
உன் அன்பின் உயரத்தையே மலைகள் சொல்லுமே
உன் அன்பின் ஆழத்தையே தாய்மை காட்டுமே
இதமான ராகங்களும் என்னில் தோன்றுமே....

கனிவான உன் முகத்தில் வெண்பனி ஒளிரும்
கண்வியக்கும் அழகுடனே தாரகை மிளிரும்-2
கடலும் வானும் அருவிகளும் உன்திறன் சான்றே
அன்பும் அருளும் பெருகிவரும் உன் திருக்கொடையே
வளமான கனவுகளும் கண்ணில் தோன்றுமே....

No comments: