
பேசு பேசு உன் கதையை - உந்தன்
குரலை கேட்டு உன்னை மீட்டு
வானகம் சேர்க்கும் தேவனவன்
வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஒளியாய்
வந்தார் மாபரன் இயேசு - உயிர்
தந்துணை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில்
பாவிகள் நம்மை மீட்கவே உலகில்
ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்து - நம்மை
வேதனை விட்டெழச் செய்தார்
கல்வாரி சிகரமதில்
No comments:
Post a Comment