Thursday, July 24, 2008

அன்பெனும் வீணையிலே

அன்பெனும் வீணையிலே- நல்
ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன்
அருளினை பாடிடுவேன்

அகமெனும் கோவிலிலே - என்
தெய்வமாய் நீ இருப்பாய்-2
அன்பெனும் விளக்கேற்றி - உன்
அடியினை வணங்கிடுவேன்

வாழ்வெனும் சோலையிலே - நல்
தென்றலாய் நீ இருப்பாய்-2
தூய்மையெனும் மலரை- நான்
தான் மலர் படைத்திடுவேன்

தென்றலே கமழ்ந்திடுமே - என்
தெய்வமே நீ இருக்க‌-2
இன்பமே மலர்ந்திடுமே- நான்
உன்னிலே வாழ்ந்திருக்க‌

No comments: