Friday, July 25, 2008

என் தேவனே

என் தேவனே என் இறைவனே
என் இனிய நேசனே
என் அன்பனே என் நண்பனே
என் இதயம் வாருமே
வா! வா ! விரைவில் வா!
என்னில் வா எழுந்து வா

வருக தேவா வருகவே
வாழ்வை எனக்குத் தருகவே(2)
உம்மில் என்றும் வாழவே
உமது அருளை பொழியவே - வா வா

தண்ணீர் கண்ட மானைப் போல்
தாவி நானும் வருகின்றேன்(2)
ஆன்ம தாகம் தீரவே
அள்ளிப் பருக விளைகின்றேன்- வா வா

No comments: