ஆண்டவர் எனது கற்பாறை
காவல் மிகுந்த மதில் கோட்டை
புகலிடமாம் கேடயமாம்
மீட்பின் வல்லமை அரண் அவராம்-2
சாவின் கயிறுகள் தெறித்தாலும்
அழிவின் சுழழில் நான் தவித்தாலும்(2)
கடவுளை நோக்கியே கதறியே அழுவேன்
மின்னலை தெறித்து துயரங்கள் துடைப்பார்
நீதி நெறிகளில் வாழ்ந்திடுவேன்
தெய்வ விதி வழி நடந்து வந்தேன்(2)
இதயத்தில் ஒளியை ஏற்றிட வந்தார்
துணையாய் என்றென்றும் என்னுடன் வருவார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment