
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன்எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத்தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது
பாதங்கள் நீயாக வேண்டும்- எந்தன்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது
ஓடங்கள் நீயாக வேண்டும்- வரும்
போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது
பாலங்கள் நீயாக வேண்டும் -இணை
தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும்- மறை
காலங்கள் எல்லாமும் என் நெஞ்ச வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும்- சுடர்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது
மேகங்கள் நீயாக வேண்டும் -மழை
No comments:
Post a Comment