Tuesday, July 22, 2008

உன் திருயாழில்

உன் திருயாழில் என் இறைவா
பல‌பண்தரும் நரமுண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில்இணைத்திட வேண்டும் இசையரசே

யாழினை நீயும் மீட்டுகையில்
இந்த‌ஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து -உந்தன்
ஏழிசையோடு இணைந்திடுமே

விண்ணக சோலையின் மலரெனவே
திகழ்எண்ணில்லா தாரகை உனக்குண்டு
உன் அருள் பேரொளி நடுவினிலே -நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்

No comments: