Wednesday, July 23, 2008

ஏழிசை நாதனே

ஏழிசை நாதனே எழுவாய் இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல‌வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழி காட்ட எழுந்து வருவாய்

வாழ்வும் வழியும் நீ எனக்கு
வளங்கள் சேர்க்கும் அருமருந்து-2
உறவை வளர்க்கும் விருந்து -2- என்னில்
நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

விழியும் ஒளியும் நீ எனக்கு
விடியல் காட்டும் ஒளிவிளக்கு-2
மனிதம் வாழும் தெய்வம்-2- என்னில்
புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து-2

No comments: