Wednesday, July 30, 2008

இறைவா உன் திருமுன்

இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல்
தாவி மேலே வருகின்றேன்
என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நானல்லவா
என்னை நோக்கி ஓடி வந்து என்னை காப்பாயோ

அன்பைத் தேடும்போது என் தந்தை நீயல்லவா
அமுதம் நாடும்போது என் அன்னை நீயல்லவா(2)
ஒரு குறையும் இன்றி காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே பார்த்த நானும்
இனி என்ன கைமாறு செய்வேன்-2

மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவன் நீதானய்யா
மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானய்யா(2)
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து
ஒரு நாளும் பிரியாமல் வளர்ந்து
உந்தன் மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழப்பேன்-2

No comments: