Wednesday, July 30, 2008

சதா சகாய

சதா சகாயத் தாய் மரியே
அம்மா உன் ஆதரவே எம் பேரு

இதோ உன் தாயிவளே
எனும் இறை மொழியே
சதா உதவும் தயை பெருகும்
அன்னை உனைத் தந்ததமா- அம்மா

கல்வாரி பலியினிலே
எம்பாவம் சுமந்தவர்க்காய்
நல் ஆறுதலாய் நின்ற தாயே
இன்றெம் துணை வாராயோ - அம்மா

அம்மா நின் பரிந்துரையே
என் தேவன் புதுமைகளால்
தண்ணீர் ரசமாய் கனிந்தது போல்
எந்தை மனம் கசியச் செய்யும்- உம்மாலே

No comments: