அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்
துன்ப சூழல்கள் சூழ்கையிலே
கவலை கறைகள் படர்கையிலே-2
அருளின் கைகள் வளைக்கையிலே
அமைதியில் நிலைப்பேன் ஆண்டவரில்
அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார்-2
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment