காலம் என்னும் ஏட்டில் என்றும்
காணும் தியாகப் பலியிதே
இயற்கைத்தாயின் மடியில் தவழ்ந்த
இனிமை நிறைந்த நல் பொருட்களோடு
இதயம் என்னும் மலரைத்தொடுத்து
இறைவா மகிழ பலியாய் தந்தோம்
இறைவா ஏற்பீர்.......
எண்ணம் என்னும் கடலில்
மூழ்கிஎடுத்த முத்தாய் நினைவும் சொல்லும்
உமது பாதம் கொண்டு வந்தோம்
உவந்து ஏற்பீர் உண்மைப் பொருளாய்
இறைவா ஏற்பீர்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment