Tuesday, July 22, 2008

காலம் என்னும்

காலம் என்னும் ஏட்டில் என்றும்
காணும் தியாகப் பலியிதே

இயற்கைத்தாயின் மடியில் தவழ்ந்த
இனிமை நிறைந்த நல் பொருட்களோடு
இதயம் என்னும் மலரைத்தொடுத்து
இறைவா மகிழ பலியாய் தந்தோம்
இறைவா ஏற்பீர்.......

எண்ணம் என்னும் கடலில்
மூழ்கிஎடுத்த முத்தாய் நினைவும் சொல்லும்
உமது பாதம் கொண்டு வந்தோம்
உவந்து ஏற்பீர் உண்மைப் பொருளாய்
இறைவா ஏற்பீர்.......

No comments: