Wednesday, July 23, 2008

வருகின்றோம் இந்நாளில்

வருகின்றோம் இந்நாளில் நன்றி
காணிக்கை தருகின்றோம்(2)
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிட செய்திடுவாய்- வரு

உழைப்பினை எடுத்து வந்தோம்
உமக்கு அதன்பலன் தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தை வளர்த்திடவே நாங்கள்
உந்தன்தியாகத்தை வாழ்த்திடுவோம்
இறைவா... என் இறைவா....உம்
மலரடி பாதம் பணிந்திடுவோம்(2)
குறைகளை நீக்கி ஏற்றுடுவாய்
ஓளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய் -வரு

ஏழைகள் உயர்ந்திடவே என்றும்
எங்கள்வாழ்வினை பகிர்ந்தளிப்போம்
சமனிலை தோன்றிடவே எங்கும்
பாவ‌பிரிவினை நீக்கிடுவோம்
உயிரே...என் உறவே...புதுவசந்தம்
விரைவில் மலர்ந்திடவே(2)
ஏழையின் துயரம் போக்கிடவே
ஏற்றிடு எங்களின் கணிக்கையை- வரு

No comments: