Friday, July 25, 2008

எந்தன் உள்ளம்

எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட இயேசுவே
ஏழை எந்தன் நெஞ்சதனில் வா
உந்தன் அன்பிலே மகிழ்ந்திருப்பேன்
என்னை உந்தன் சொந்தமாக்க வா

பாவி என்னைத் தேடி வந்த இயேசுவே
பாவக் கறைதனை என்னில் நீக்க வா
பாசம் பொங்கும் நெஞ்சம் கொண்ட இயேசுவே
இந்த பாவிதனை ஏற்றுக்கொள்ள வா
நித்தம் நித்தம் உன்னையே வணங்கிடுவேன்
உந்தன் சித்தப்படி என்னை மாற்றவா

உயிர்தரும் உணவான இயேசுவே
எந்தன் உள்ளத்திற்கு உயிர் தரவா
விண்ணகத்தின் வழியான இயேசுவே
என்னை உன்னகத்து கொண்டு செல்லவா
உன்னை எண்ணியே வாழ்ந்திருப்பேன்
என்னை இனி மறந்திருப்பேன்

No comments: