
உதயமாய் மனதிலே ஒளியை ஏற்றவா
வாழ்விலே வலிமையாகவா
வசந்தமாய் என்னில் வாழ வா
எங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும்
தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும்
நன்மை வடிவாக நாதா நீ வேண்டும்
நாளும் புது வாழ்வு நானாக வேண்டும்
துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்றபோது
துணையாக் மருந்தாக நீ என்னில் வர வேண்டும்
வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும்
வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும்
மீளா துன்பங்கள் எனை நீங்க வேண்டும்
மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும்
தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும்
தயையோடு எனை நாளும் நீ நடந்திட வேண்டும்
No comments:
Post a Comment