Tuesday, July 22, 2008

இதயமே இதயமே

இதயமே இதயமே என்னில் எழுந்துவா
உதயமாய் மனதிலே ஒளியை ஏற்றவா
வாழ்விலே வலிமையாகவா
வசந்தமாய் என்னில் வாழ வா

எங்கும் எனதுள்ளம் நீயாக வேண்டும்
தாங்கிடும் உனது கரம் எனைக் காக்க வேண்டும்
நன்மை வடிவாக நாதா நீ வேண்டும்
நாளும் புது வாழ்வு நானாக வேண்டும்
துயரும் பிணியும் என்னை இங்கு சூழ்கின்றபோது
துணையாக் மருந்தாக நீ என்னில் வர வேண்டும்

வாழும் வாழ்வெல்லாம் நீயாக வேண்டும்
வசந்தம் என் வாழ்வில் நிலையாக வேண்டும்
மீளா துன்பங்கள் எனை நீங்க வேண்டும்
மீண்டும் உன் பாதம் நான் சேர வேண்டும்
தாயும் தந்தை யாவுமே நீயாக வேண்டும்
தயையோடு எனை நாளும் நீ நடந்திட வேண்டும்

No comments: