Monday, July 28, 2008

வங்கக் கடலோரம்

வங்கக் கடலோரம் உந்தன் தலம் தேடி
வந்தாரை நலமாக்கும் அன்பே
ஆரோக்கியத் தாயே அம்மா

வேலை கிடைக்கும் என்று வேளைநகர் வந்து
வெருங்கையாய் சென்றாருண்டோ நல்ல‌
எந்தன் வேளை இன்றும் வரவில்லை
என்று சொன்ன இயேசு அன்று
உன் சொல்லில் இசைந்தாரன்றோ
உன் சொல்லில் வரம் வேண்டி வந்தோம்

காவல் கரங்கள் நீட்டி கருணை
சிரம் காட்டி கலங்காதே என்றாய் தாயே உந்தன்
அன்பை வேண்டி வந்து அல்லல்
சேர்ந்த எந்தன் வாழ்வில்
துதிப்பாடி உனைப் போற்றினோம்
தூயோனின் தூயான மாமரியே வாழ்க‌

No comments: