ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்(2)
எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைபட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே(2)
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பது நாமே- ஆண்டவரின்
நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரை குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்
தேர்ந்தெடுத்தார்
தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்(2)
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அழைத்து உன்னை வழி நடத்துகின்றோம்- ஆண்டவரின்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment