
என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா.......(4)
உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றி காத்து வந்தாய் - ஒரு
அன்னையை போலவே அன்பினை பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய்-2
மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனத்தினை நிரப்புதல் பார்த்திருந்தாய் - உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றி காத்திருந்தாய்-2
No comments:
Post a Comment