
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்-2
விண்ணில் வாழும் விமலா
மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ
எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக-2
நீரும் மழையும் முகிலால்
பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால்
வளமும் வாழ்வும் உம்மால் - ஒளியே
அருளே பொங்கும் அமலா
இருளைப் போக்க வாராய்
குறையை நீக்கும் நிமலா
நிறையை வளர்க்க வாராய்- ஒளியே
No comments:
Post a Comment