Wednesday, July 23, 2008

குறையாத அன்பு

குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலை மோதுதே அந்த
‌அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே-2

கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணாக இயேசு எனைக் காக்கின்றார்(2)- உன்னை
எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண் மீது வழ வழி செய்கின்றாய் ஆ...ஆ....
நான் மண்மீது வாழ வழி செய்கின்றாய்

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவில் முடிவாகுமே(2)- மண்ணில்
துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே ஆ...ஆ...
கண்ணீர் துடைக்கின்ற இயேசு அரசாகுமே

No comments: