Wednesday, July 23, 2008

ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு
என் அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு

அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா - உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா

அமுதாக ஆன்மாவில் வருகின்றவா
என்னை உருவாக்க வா
நல் அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளியேற்றவா
சிறுதிரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே- நீ
என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடிவா அருள் கோடி தா

No comments: