Friday, July 25, 2008

என்னில் ஒன்றாக

என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்
எழுந்து வருகின்றார்
எண்ணிலா அருளை அன்புடனே
தலைவன் தருகின்றார்

உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே
பகலை மறைக்கும் முகிலாய் பல பழிகள் சூழ்ந்ததே
அந்த முகிலும் இருளும் குறையும் தீர‌முழுமை தோன்றுமே

என்னில் இணையும் கிளைகளோ வாழ்வைத் தாங்குமே
என்னைப் பிரியும் உள்ளத்தை நாளும் தேடுவேன்
என்றும் பகர்ந்த இறைவா என்னை இணைக்க வாருமே
உந்தன் அன்பு விருந்தை நாளும் அருந்திஅமைதி காணுவேன்

1 comment:

இளங்குமரன் said...

உதயம் காண விளையுமோர் மலரைப் போலவே
இதயம் இறைவன் வரவையே நிதமும் தேடுதே


இந்த வரிகள் உயிருள்ளவை. என்னை என் இளமைக் காலத்திற்குக் கொண்டு செல்லும் மந்திர வரிகள். மிகக் நன்றி நண்பரே.