Wednesday, July 23, 2008

நன்றி என்று சொல்லி

நன்றி என்று சொல்லி
எந்தன் நெஞ்சம் உன்னில் வாழும்
எந்த நாளும் உந்தன் அன்பை தேடும்
அது துள்ளி வரும் தென்றலிலே
புத்தம் புது கவினூறு
மன்னவனின் புகழினைப் பாடும்

விழிகளில் தொடர்ந்திடும் ஏக்கம் அது
கதிர் கண்ட பனி போல மாறும்-2
இதயத்தில் இனிய ராகங்கள் உதயமாகுமே
உள்ளங்களில் நீ வாழ
‌உறவுகள் நான் கூட‌
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே! - நன்றி

உருவத்தில் தெரிகின்ற தெய்வம்
நம்இதயத்தில் வாழ்ந்திட வேண்டும்-2
மனிதரே தெய்வம் வாழ்ந்திடும் கோயில் ஆகுமே
புத்தம் புது பூமி ஒன்று
நீயும் வந்து வாழ இங்கு
உன் வாசல் தேடி வருவேன்
என் மன்னவனே !- நன்றி

No comments: