Tuesday, July 22, 2008

எந்தன் நாவில் புதுப்பாடல்

எந்தன் நாவில் புதுப்பாடல் எந்தன்
இயேசு தருகின்றார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - அல்லேலூயா

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்

தந்தை தாயார் நண்பர் உற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேனமை சொல்லுவேன்

இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக்காண காத்திருக்கிறேன்

No comments: