Wednesday, July 23, 2008

உந்தன் பாதச்சுவடுகளில்

உந்தன் பாதச்சுவடுகளில் இறைவா
பயணம் தொடங்குகிறேன்
உந்தன் பணிக்காக நான் பலியாக எனை
அழைத்தாய் வந்தேனய்யா‍‍- உந்தன்
உமது பாதையில் பயணம் தொடர்வேன்
பயணம் தொடர்வேன்... பயணம் தொடர்வேன்....

அழைத்தவனே என்னை அழைத்தவனே- உந்தன்
ஆற்றலை நாடுகின்றேன்
உயிர்த்தவனே நின் உயிர்த்த ஆவியால்
ஊக்கம் வேண்டுகின்றேன் - அழைத்தவனே
புதுச்சமுதாயம் வடிவமைக்கும்- உந்தன்
புனித கரங்களாய் மாறிடவே (2)- உந்தன்

மலர்களிலே வண்ண மலர்களிலே உந்தன்
நறுமணம் கமழ்வது போல்
மணங்களிலும் என் மனதினிலும்- உம்
அருள்மனம் சேர்த்தருளும் - மலர்களிலே
இதயங்களை நான் ஈர்த்திடுவேன் உந்தன்
இனிய வானரசின் உறவாக(2)- உந்தன

No comments: