Wednesday, July 23, 2008

நெஞ்ச‌த்தில் வா

நெஞ்ச‌தில் வா என் தெய்வ‌மே
நீயாக‌ நான் மாற‌வே
உன்னை நான் க‌ண்டு உன் பாதை சென்று
நீயாக‌ நான் வாழ‌வே-2

என் உள்ள‌ம் நீ வ‌ந்து அம‌ர்கின்ற‌ நேர‌ம்
என் க‌ண்க‌ள் புதுப் ப‌ர்வை காணும்-2
என்னில் நீ ஒன்றான‌ நிலையான‌ உற‌வில்
புது வாழ்வு எனை வ‌ந்து சேரும்
எனில் வாழ்வ‌து இனி நீய‌ல்லவா-2
உன் வாழ்வு எந்தன் வ‌ழி அல்ல‌வா

உன்னோடு கைகோர்த்து நான் செல்லும் பாதை
ஒரு போதும் த‌வ‌றாவ‌தில்லை-2
என்னோடு நீ வாழும் சுக‌மான‌ நினைவில்
எதைக் க‌ண்டும் நான் அஞ்ச‌வில்லை
என் நெஞ்ச‌மே இனி உன் இல்ல‌மே-2
என்னோடு உட‌ன்வாழ‌ வா தெய்வ‌மே

No comments: