Wednesday, July 23, 2008

எல்லாம் உன் அருளே‍ !!

எல்லாம் உன் அருளே‍ இறைவா
எல்லாம் உன் கொடையே
நான் இருப்பதும் என் இயக்கமும்
நான் மலர்வதும் உன்னில் மறைவதும்
நான் பெற்றுக்கொள்ளாததில்லை இங்கு
நீயின்றி நானேதுமில்லைஎன் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி...எல்லாம்

இந்த பூமியில் நான் வாழ்வதும்
உடலும் உள்ளமும் நலமாவதும சொந்த
‌உறவுகள் நான் காண்பதும்
பாசங்களில் நான் மகிழ்வதும்
அருளாலே நான் பெற்ற வாய்ப்பு உன்
அன்பாலே நான் பெற்ற அமைப்பு
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி

என்னைத் தேர்ந்ததும் என்னில் சேர்ந்ததும்
எங்கெங்கும் நான் காணும் எழில்களும்
என் திறமைகள் என் உரிமைகள்
நீதியில் நான் கொண்ட காதலும்
உன்னோடு நான் கொள்ளும் உறவும்
இவ்வுலகோடு நான் கொள்ளும் பரிவும்
என் தேவனே எல்லாம் நீர் தந்தது
உன் தேவை நிறைவேற சரணாகதி

No comments: