
என்னையே உனக்காக தருகின்றேன்-2
மலைகளில் விழுந்து மனமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து.....இறைவா
பசி உள்ளோர்க்கு உணவாக நான் இருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன்-2
விழுந்தவரை தூக்கிடுவேன்- இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்- இதுவே
நான் தரும் காணிக்கையே இறைவா
இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன
கையில்இருப்பதை கொடுப்பதே இன்பமென்றாய்-2
பலியை அல்ல இரக்கத்தையே- என்னில்
விரும்புகின்ற இறைமகனே- உனைப்போல்
நானும் உருவாகிட ......இறைவா
No comments:
Post a Comment