Monday, July 28, 2008

சதா சகாயத் தாயே

சதா சகாயத் தாயே சகல மைந்தைர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே
தினம் நினைத்துமே

உதயத் தாரகை இருளில் நீயென
‌உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர்
பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென
‌நிதம் புகழுவோம்

புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
புனித மாமரியே
சுதனும் உனையே தாயென‌
அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் பதுமை அன்னையும் நீர்
நயமும் பெருகும் சுனையும் நீயென‌
நிதம் புகழுவோம்

No comments: