
அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்
இயேசுவே...... இயேசுவே
அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை
அழியா உறவில் இணைக்கும் பணியை
நிறைவாய் வாழ்ந்த இறை மைந்தனே
எங்கள் அருள் வாழ்வின் வழிகாட்டியே - உம் பணி
சிறைபட்டோர் விடுதலை அடைய வந்தீர்
வறியவர் வாழ்வுக்கு வழி வகுத்தீர்(2)
உலகின் இடர்களை வென்றிடவே இறை
சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே
நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்
புதிதாய் உலகை மாற்றினிரே
தந்தையின் அன்பை பகிர்ந்தவரே இறை
ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே(2)
ஆயிரமாயிரம் புதுமைகளால் அன்று
எளியவர் மனதை ஆட்கொண்டீர்
வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்
எம்மிடம் வாழ்ந்திடும் பரம்பொருளே - உம் பணி
No comments:
Post a Comment