
ஏற்றி போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
தாழ் நிலை இருந்த தம் அடியவரை
தயையுடன் கண்கள் நோக்கினார்
இந்நாள் முதலாம் தலைமுறைகள்
எனைப்பேறுடையாள் என்றிடுமே
ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல் பல புரிந்துள்ளார்
அவர்தம் பெயரும் புனிதமாகும்
அவருகஞ்சுவோர்க்கு புனிதமாகும்.
No comments:
Post a Comment