Wednesday, July 23, 2008

என்னை தந்திட‌

என்னைத் தந்திட எழுந்து வருகிறேன்
எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே-2

மாறிட மறுக்கும் என் மனதினை தருகிறேன்
மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன்-2
இழந்து நான் பலியாகி இறை உன்னை
தந்திடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு

பகைமை வளைக்கும் என் உணர்வினை த‌ருகிறேன்
பாசம் வளர்த்திட உன் உறவினை கேட்கிறேன்-2
உறவின் கரமாகி உனதருளை
கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு
எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு

No comments: