Wednesday, July 30, 2008

எந்தன் ஆன்மா

எந்தன் ஆன்மா ஆண்டவரை
ஏற்றி போற்றிடுதே
இந்த அடிமை என்னை அவர்
நினைந்ததனால் அந்த மீட்பரில்
நெஞ்சம் மகிழ்கின்றதே

வல்லவர் எனக்காய் பெரியன புரிந்தார்
வையகம் எனை தினம் வாழ்த்திடுமே
அருள் நிறை மரியே வாழ்க

‌ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் பெரும் பேறுபெற்றீர்
வாழ்க மரியே வாழ்க‌
அவர் தம் பதம் பணிவோர் தலைமுறைக்கெல்லாம்
தயவருள்வார் அவர் தூயவராம்-2

அவர் தமதாற்றல் கரத்தினை நீட்டி
செறுக்கடைந்தோரை சிறகடித்தார்(2)- அவர்
வலியோரை உயர் இருக்கையின்றிறக்கி
எளியோரை மிக உயர்த்தி விட்டார்
பசித்தோரை பல நலன் கொண்டு நிரப்பி
செல்வரை வெறுங்கையறென விடுத்தார்-2

No comments: