Wednesday, July 23, 2008

உயிருள்ள உணவு

நானே வானின்று வந்த உணவு‍ என்னை
உண்பவன் என்றுமே வாழ்வான்
என்று சொன்ன இயேசுவே

உணவாக வா என் துணையாகவா
என் மன வானிலே என் சொந்தமாகவா-2

தீராத தாகத்தில் தவிக்கின்ற நெஞ்சம்
தினம் தினம் போராடி சோர்வுற்று அஞ்சும் தாகம்
கொண்டோர்களை சுமை சுமந்தோர்களை-2- அன்பால்
கைதூக்கி களைப்பாற்றும் என் இயேசுவே-2

வாழ்வுக்கும் உணவாக நீ வந்த நேரம்
நோய் தீர்க்கும் மருந்தாக தினம் என்னை காரும்
உள்ளம்உடைந்தோர்களை மாண்பு இழந்தோர்களை-2- உந்தன்
பாசத்தால் அணைக்கின்ற என் இயேசுவ-2



No comments: